×

விதை நேர்த்தி விழிப்புணர்வு

கூடலூர், ஏப்.28: பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள், நந்தனா, ஆர்த்ரா, ஸ்மினு சந்தோஷ், வைஷ்ணவி, பவுலின் மேரி, ஜனனி, அம்ருதா, அஸ்வினி, இனியா, ஆஷிகா, கேஎஸ் ஆஷிகா, ரியானா ஆகியோர் கம்பம் பகுதியில் கிராம தங்கல் பயிற்சித் திட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக விதைகள் தினத்தை முன்னிட்டு, கூடலூரில் உள்ள விவசாயி ஹரிஹரனின் உளுந்து தோட்டத்தில் விதை நேர்த்தி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

The post விதை நேர்த்தி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Nandana ,Arthra ,Sminu Santhosh ,Vaishnavi ,Pauline Mary ,Janani ,Amrutha ,Ashwini ,Iniya ,Ashika ,KS Ashika ,Riana ,Kullapuram College of Agricultural Technology ,Periyakulam ,
× RELATED கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!